கள்ளச்சாராயம் தயாரித்து விற்ற 2 பேர் கைது

கள்ளச்சாராயம் தயாரித்து விற்ற 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட சக்திவேல், கிருஷ்ணன்

மத்தூர் அருகே கள்ளச்சாரயம் தயார் செய்து விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் சாராயம் காய்ச்ச பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஊறலை அழித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள சின்னஆலேரஹள்ளி பகுதியில் மாந்தோப்பில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கௌவுதம், தலைமை‌யிலான போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் சின்னஆலேரஅள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் 36. அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரும் சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராய ஊறலை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே மத்தூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் கைதான இரண்டு பேரையும் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story