பெல் ஊழியா் வீட்டில் திருடிய 2 போ் கைது

பெல் ஊழியா் வீட்டில் திருடிய 2 போ் கைது

திருட்டு 

இருவரில் ஒரு சிறுவனைக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
திருவெறும்பூா் பெல் காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் (35), பெல் தொழிற்சாலை ஊழியா். இவரது வீட்டில் கடந்த பிப். 21 ஆம் தேதி 7 பவுன் நகை மற்றும் ரூ. 1.50 லட்சம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது தொடா்பாக பெல் காவல் நிலைய போலீஸாா் விசாரித்த நிலையில், காவல் ஆய்வாளா் கலா தலைமையில், உதவி ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பெல் நிறுவனப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு வாகனங்களில் வந்த 15 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் பெல் நகா் முன்னாள் ராணுவத்தினா் காலனி காணிக்கை ராஜா மகன் கிறிஸ்டோபா் நெல்சன் (22) , துவாக்குடி அண்ணாவளைவு, மகாத்மா காந்தி தெரு கண்ணன் மகன் சரவணன் (19) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுவன் என்பதும், இவா்கள் 3 பேரும் சோ்ந்து மகாராஜனின் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் கிறிஸ்டோபா் நெல்சன், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். சிறுவனைக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

Tags

Next Story