அரசு அனுமதியில்லாமல் மது விற்ற 2 பேர் கைது !

அரசு அனுமதியில்லாமல் மது விற்ற 2 பேர் கைது !

 மது

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜம் தியேட்டர், கத்தேரி பிரிவு உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் மது விற்றது தெரியவந்தது. மது விற்றதாக கனகரத்தினம், 67, மதி, 43, இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story