ஸ்கூட்டர் திருடியவருக்கு  3ஆண்டு சிறை - இரணியல் நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்கூட்டர் திருடியவருக்கு  3ஆண்டு சிறை - இரணியல் நீதிமன்றம் தீர்ப்பு

குற்றவாளி

இரணியல் அருகே வீட்டு முன்பு நிறுத்தி வைத்த ஸ்கூட்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாடு விளையை சேர்ந்தவர் சுரேஷ் (48). டிரைவர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ஸ்கூட்டரை தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்து விட்டு வெளியூர் சென்று விட்டார். மறுநாள் காலையில் பைக்கை காண காணவில்லை. அவரது மனைவி சுபிதா உடனடியாக சுரேஷுக்கு தகவல் தெரிவித்தார். ஆகஸ்ட் 16ஆம் தேதி ஊருக்கு வந்த சுரேஷ் ஸ்கூட்டரை நண்பர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து ஸ்கூட்டரை திருடிய மேலகிருஷ்ணன் புதூர் அம்மன் கோவில் தெருவில் சேர்ந்த அன்பரசன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமீர்தீன், வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக்கை திருடிய அன்பரசனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

Tags

Next Story