டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

 சிறை

நாகர்கோவிலில் டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பெருவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் (42) டிரைவர். இவர் கடந்த 3.7. 2017 அன்று பார்வதிபுரத்தில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வினில் நேசகண்ணன் (35) என்பவர் முன் விரோதம் காரணமாக விஜயகுமாரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் விஜயகுமார் கடையில் உள்ள கண்ணாடி கதவில் விழுந்தார். இதனால் கண்ணாடி கதவு உடைந்தது. அப்போது உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து விஜயகுமாரை வினில் நேசகுமார் கண்ணன் குத்தியுள்ளார். இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வினில் நேச கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் இரண்டாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட வினில் நேச கண்ணனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story