33 மயில்கள் மர்மமான முறையில் இறப்பு: வனத்துறையினர் விசாரணை

33 மயில்கள் மர்மமான முறையில் இறப்பு: வனத்துறையினர் விசாரணை

இறந்த மயில்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்


கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியில் 33 மயில்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள வதம்பச்சேரி காந்திநகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 17 மயில்களும்,ராமசாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய காலி இடத்தில் 12 மயில்களும்,கோபால்சாமி என்பவருக்கு என்பவருக்கு சொந்தமான இடத்தில் 2 மயில்களும்,கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 2 மயில்கள் என 33 மயில்கள் இறந்து கிடந்தது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சுல்தான்பேட்டை. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவலளித்தனர். வனலுவலர்கள் சந்தியா மற்றும் சந்துரு,அரவிந்த் ஆகியோர் உடனடியாக மயில்கள் இறந்து கிடந்த இடத்தில் பார்வையிட்டனர்.வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் இறந்து போன 33 மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக மதுக்கரை எடுத்துச் செல்லபட்டது.

மேலும் கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட மக்காச்சோள விதைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த வனத்துறையினர் சேகரித்து சென்றனர்.தற்போது மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யபட்டு வருகிறது.பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும்.

Tags

Next Story