தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 36க்கு வேலை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 36க்கு வேலை

வேலைவாய்ப்பு முகாம் 

விழுப்புரத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 36 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இம்முகாமில் 202 பேர் பங்கேற்றனர். இவர்களில் தகுதியுள்ள 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் வழங்கி பாராட்டினார். அப்போது இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், இளம் தொழிலர் அலுவலர் நாக லட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story