ஓட்டு இல்லாததால் 37 பேர் வாக்குவாதம்!

ஓட்டு இல்லாததால் 37 பேர் வாக்குவாதம்!

கரூரில் வாக்காளார் பட்டியலில் ஓட்டு இல்லாததால் 37 பேர் வாக்குவாதம் செய்தனர்.


கரூரில் வாக்காளார் பட்டியலில் ஓட்டு இல்லாததால் 37 பேர் வாக்குவாதம் செய்தனர்.
கரூர் லோக்சபா தொகுதியை சேர்ந்த விராலிமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செல்லுக்குடி கிராமத்தில் 400 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அங்கு உள்ள அரசு பள்ளியில் ஓட்டு சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க சென்றபோது 37 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறி ஓட்டுப்பதிவு அலுவலர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்டியலை சரிபார்த்த போது இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ள நிலையில் உயிருடன் இருக்கும் எங்கள் பெயர் ஏன் இல்லை இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களை ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்த ஓட்டு சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Read MoreRead Less
Next Story