கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது

கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது

லால்குடி அருகே தின்னக்குளம் ஊராட்சியிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

லால்குடி அருகே தின்னக்குளம் ஊராட்சியிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியை அடுத்த திண்ணகு ளம் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவதாக கிராம நிர்வாக அதிகாரி மாவட்ட காவல் கண்கானிப்பாளரின் தனிப்படை பிரிவு போலீசாருக்கு புகார் அளித்தார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது,பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஊத்தங்கல் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் பிரசாந்த் (வயது 26), புள்ளம்பாடி ஒன்றியம் திண்ணகுளம் நடுத்தெ ருவை சேர்ந்த மணி (54), அறிவுகரசு (54), பிரபு (36) ஆகியோர் பொக்லைன் இயந்திர உதவியுடன் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்து .பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்து கல்லக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பின்னர் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் கீழ் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story