மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி !

மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி !

மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி 

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி. போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாக்குப்பம் ரோடு பாரதி தாசன் பேட்டையை சேர்ந்தவர் மாரி தொழிலாளி இவருடைய மனைவி பிரபா தேவேந்திரன்வதி. இவர்களது மகன் தேவேந்திரன் (வயது 9). இவன் ராஜாங்குளம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், தேவேந்திரன் நேற்று மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் உள்ள நகராட்சி தொட்டியில் குடிநீர் பிடிக்க சென்றான், தொட்டி காலியாக இருந்ததால் குடிநீர் வரவில்லை. இதனால் தொட்டிக்கு அருகே உள்ள குடிநீர் ஏற்றுவதற்கான மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளான். அப்போது திடீரென அவனை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கிய தேவேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தேவேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது பிரபாவதி மற்றும் உறவினர்கள் தேவேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story