வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய 5 பேர் கைது

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய 5  பேர் கைது

இருசக்கர வாகனம் சேதம் 

ஆறுகாணியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.
அருமனை அருகே உள்ள மலையோரப் பகுதியான ஆறுகாணியில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் அந்தப் பகுதியில் வீடுகள் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர, 4 சக்கர வாகனங்களை சேதப்படுத்தினர். இதுகுறித்து ஷாஜி மற்றும் வேலிஸ் ஆகியோர் ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களில் ஷாஜி தனது வீட்டின் முன்பு. நிறுத்தி இருந்த டெம்போவையும், வேலிஸ் தனது வீட்டின் முன் நின்ற 2 இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியதாக கூறியிருந்தனர்.இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆறுகாணி போலீசார் மர்மநபர்களை தேடிவந்தனர். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஷாஜு , ரெஜி, பிரவீன்,சுஜித், ராஜேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் அனைவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்பதும், போதையில் வாகனங்களை அடித்து உடைத்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story