பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு!

பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு!

வழக்கு

பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு - மர்மநபர்களுக்கு போலிசார் வலைவிச்சு
திருமயம் தாலுகா கே.ராயவரத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி மல்லிகா (52). நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மல்லிகா மருத்துவ சிகிச்சைக்காக கே.புதுப்பட்டி சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். கீழாநிலைக் கோட்டை அருகே வந்தபோது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் மொபட் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி மல்லிகா கீழே விழுந்ததும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். காயமடைந்த மல்லிகா கே.புதுப் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story