குட்கா விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல்

குட்கா விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல்

பைல் படம் 

எருமப்பட்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
எருமப்பட்டி மற்றும் காவக்காரபட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர் அப்பொழுது அங்குள்ள ஏழு பெட்டிக்கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது இதை அடுத்து அந்த ஏழு கடைகளுக்கும் சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறையினர் இந்த கடைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் அபராத தொகை விதிக்கப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story