சேலத்தில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

சேலத்தில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகள் 

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம், செவ்வாய்ப்பேட்டையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிகாலை வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து நிறுத்தி சோதனையில் வாகனத்தில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதனிடம் ஒப்படைத்தனர். வாகன ஓட்டுநரான சென்னை, கிண்டியைச் சேர்ந்த சுனில் கஞ்சுவிடம் (30) அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கொலுசுகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'உரிய ஆவணங்கள் இருந்தும் வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவுள்ளோம் என்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story