ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.70,000 பணம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.70,000 பணம் பறிமுதல்

பணம் பறிமுதல்

காரணித்தாங்கல் சோதனைச்சாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 70,000 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், காரணித்தாங்கல் சோதனைச்சாவடியில், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த, 'மஹிந்திரா ஸ்விப்ட்' காரை மடக்கி சோதனை செய்ததில், அந்த காரில் பயணம் செய்த சுந்தர்ராஜன் என்பவர், உரிய ஆவணங்களின்றி 70,000 ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர், பணத்தை ஸ்ரீபெரும்புதுார் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story