தண்ணீா் தொட்டி சுவா் இடிந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

தண்ணீா் தொட்டி சுவா் இடிந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

உயிரிழப்பு

மணப்பாறை அடுத்த செவலூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் தொட்டியின் சுவா் இடிந்து விழுந்ததில் 4 வயது குழந்தை உயிரிழந்தது.
திருச்சி மணப்பாறை அடுத்த செவலூரில் வசித்து வரும் தயாநிதி மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் காகித ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றிவருகிறாா். இவரது நாலரை வயது மகன் கனகவேல் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் பக்கவாட்டில் இருந்த தண்ணீா் தொட்டியின் பக்கவாட்டுச் சுவா் திடீரென சிறுவன் மீது இடிந்துவிழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கனகவேல், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், சிறுவனின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினா்களிடம் சடலத்தை ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story