சேலத்தில் ஓட்டல் ஊழியர் திடீர் சாவு யார் அவர் ?

சேலத்தில் ஓட்டல் ஊழியர் திடீர் சாவு யார் அவர் ?

முதியவர் இறந்தார்

ஒரு ஓட்டலில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம் செவ்வாய்பேட்டை, தம்மண்ண சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேலை பார்த்தார். திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். செவ்வாய்பேட்டை போலீசார் முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெயர் சீனிவாசன் என்பது மட்டும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. ஆனால் மற்ற விவரங்கள் தெரிய வில்லை. இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story