சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வங்கி ஊழியர் பலி !

சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வங்கி ஊழியர் பலி !

வழக்குப்பதிவு

சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வங்கி ஊழியர் பலி - தலைமறைவான டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தை அடுத்த மல்லமூப்பம்பட்டி அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). சேலத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு அம்மாபேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு வலது கை மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்தால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story