சாலை விபத்தில் சிறுவன் பலி !

சாலை விபத்தில் சிறுவன் பலி !

 சிறுவன் பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பலியானர்.போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சின்னசேலம் அடுத்த வரதப்பனுார் காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் மகன் ராதாகிருஷ்ணன்,16; பெரியசிறுவத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 3ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் அஜித்குமார், 21; என்பவருடன் ஹோண்டா ட்ரீம் பைக்கில் சின்னசேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வரதப்பனுார் திரும்பினர். பைக்கை அஜித்குமார் ஓட்டினார். இரவு 8:30 மணியளவில் பெரிய சிறுவத்துார் எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மகேந்திரா வெரிட்டோ கார் மோதியது. அதில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர். உடன், இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதியம் இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story