பைக்கில் ஆற்று மணல் கடத்திய நபர் மீது வழக்கு

பைக்கில் ஆற்று மணல் கடத்திய நபர் மீது வழக்கு

வழக்கு பதிவு

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பாப்பாக்குடி பகுதியில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில்  சாக்குப் பையில் ஆற்று மணல் ஏற்றி சென்ற நபர் மீது மண்மேடு போலீசார் வழக்கு
மயிலாடுதுறை அருகே மணமேடு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதியிலிருந்து இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் கொள்ளகடக்கரையோரம்ரோந்து பணியில் ஈடுபட்டபோது பாப்பாக்குடி என்ற இடத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்று மணல் 3 சாக்கு பையில் கட்டி பைக்கில் கடத்திச் சென்றதை பார்த்து நிறுத்தினர், வாகனத்தை ஓட்டி வந்தவர் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். மணல்மேடு போலீசார் பைக் மற்றும் மணல் மூட்டைகளை கைப்பற்றி திருட்டு மற்றும் கனிம வள சட்டத்தின்கீழ் பாப்பாக்குடி மெயின் ரோடு சந்திரசேகர் மகன் மணிகண்டன்மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story