"அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு குதிரை தானம் வழங்கிய பக்தர்"

அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு குதிரை தானம் வழங்கிய பக்தர்

குதிரை தானம் வழங்கிய பக்தர்

அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு பெண் குதிரை ஒன்றை தானமாக வழங்கினார்
காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலமான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பேயாழ்வார், திருமங்கையாழ்வர் ஆகிய இருவரால் மங்களாசாசனம் செய்ய பெற்ற 108 திவ்யதேசங்களில், 44வதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில், 2 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும் 26ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தரான பொறியாளர் ஜெயபிரகாஷ், அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு பெண் குதிரை ஒன்றை தானமாக வழங்கினார். நேற்று காலை, குதிரைக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, அஷ்டபுஜ பெருமாள் கோவில் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரிடம் முறைப்படி குதிரையை தானமாக வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story