பூதப்பாண்டியில் 40 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது 

பூதப்பாண்டியில் 40 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது 
கைது செய்யப்பட்ட மணி
பூதப்பாண்டி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மோகனதாஸ் என்ற மணி (51). இவர் அதே பகுதியில் அரசு மது பானத்தை வாங்கி அனுமதியின்றி அதிக விலைக்கி விற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வீரவநல்லூர் பகுதியில் நின்ற இவரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து 180 மிலி கொள்ளளவு கொண்ட 40 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விலைக்கு விற்பதற்க்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story