சேலத்தில் கார் நிறுத்துவதில் தகராறு - மெக்கானிக் கைது !

சேலத்தில் கார் நிறுத்துவதில் தகராறு -  மெக்கானிக் கைது !

கைது

சேலம் அருகே கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டதால் வாலிபரை தாக்கிய மெக்கானிக் கைது.
கோவை சுந்தராபுரம் வெங்கடாஜலபதி நகரைச் சேர்ந்தவர் சச்சின் குமார் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு காரில் சென்றார். சீலநாயக்கன்பட்டி அருகே அவர்கள் வந்தபோது, சாப்பிடுவதற்காக அங்குள்ள ஓட்டல் முன்பு காரை நிறுத்தினர். அப்போது, அருகே உள்ள மெக்கானிக் கடைக்காரர் மாரியப்பன்(44) காரை இந்த பகுதியில் நிறுத்தக்கூடாது என சச்சினிடம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து அவர்களுக்கிடையே தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், இரும்பு கம்பியால் சச்சின் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story