இளம்பிள்ளை அருகே வீட்டில் இறந்து கிடந்த தாய், மகன்

இளம்பிள்ளை அருகே வீட்டில் இறந்து கிடந்த தாய், மகன்
சடலம் கண்டெடுப்பு
இளம்பிள்ளை அருகே வீட்டில் தாய் மகன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த ராமாபுரம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள். இவர் கணவரை பிரிந்து கடந்த 8 மாதங்களாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வருகிறார். பழனியப்பன், அவருடைய தாய் அலமேலு (84) ஆகியோர் ராமாபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று தாய், மகன் வீட்டில் இறந்து கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த 2 ேபரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அலமேலு வயது முதிர்வால் இறந்திருக்கலாம் எனவும், இதனை பார்த்த பழனியப்பன் அதிர்ச்சியில் உறைந்தார். மனைவி பிரிந்து சென்று விட்டதாலும், தாயும் தற்போது இறந்துவிட்டதால் துக்கம் தாங்க முடியாத மனவேதனையில் இறந்திருக்கலாம் என தெரியவருகிறது. எனினும் அவர் விஷம் குடித்து தற்கொலை கொண்டாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story