துவரங்குறிச்சி பகுதியில் தீயணைப்புத்துறையால் பிடிப்பட்ட நல்ல பாம்பு

துவரங்குறிச்சி பகுதியில் தீயணைப்புத்துறையால் பிடிப்பட்ட  நல்ல பாம்பு

நல்ல பாம்பு  

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சுமாா் 6 அடி நீள நல்ல பாம்பு தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டியில் வசிப்பவா் மணிகண்டன். இவரது வீட்டின் அருகில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 6 அடி உள்ள நல்ல பாம்பு இருப்பதைக் கண்டாா். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் மனோகா் மற்றும் சிறப்பு நிலைய அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை வீரா்கள் சிறிது நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story