சாராய ஊறல் வைத்திருந்த நபர் கைது !

சாராய ஊறல் வைத்திருந்த நபர் கைது !

கைது

அயோத்தியாப்பட்டணம் அருகே சாராய ஊறல் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அருநூற்றுமலை, பெலாப்பாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நேற்று காரிப்பட்டி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அருநூற்றுமலை அருகே 2 பேரல்களில் சாராய ஊறல் வைத்திருந்த சிறுமலை பகுதியை சேர்ந்த குழந்தைவேலு (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பேரலில் வைத்திருந்த 350 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 40 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story