குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை

குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை

குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை

விருதுநகர் அருகே குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மீசலூர் பகுதியைச் சார்ந்தவர் மோகன்ராஜ் இவருடைய மனைவி தனலட்சுமி மோகன்ராஜ் விவசாயம் மற்றும் ஆடுகள் வைத்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது. விவசாயம் சார்ந்த தொழில் செய்து வந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி வயிற்று வலியும் வயிற்று வலி காரணமாக சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனை மனநல மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் இருந்தாலும் இரவு முழுவதும் தூக்கம் வராமல் அடிக்கடி மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாகவும் இதை அடுத்து கடந்த 15ஆம் தேதி இரவு 7 மணிக்கு தனலட்சுமி கணவருக்கு தொலைபேசியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் கணவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தனலட்சுமி பேருந்து மூலம் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது தோட்டத்தில் விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு போராடிய மோகன்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சைகள் இருந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி பலியானார் இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story