கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு 

கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு 

கோப்பு படம்

குமரி அருகே கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு வாகையடி தெருவை சேர்ந்தவர் மணிலால் (50). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டத்தில் சக தொழிலாளர்களுடன் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மேல் மாடியில் பலகைகளை கழற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மணிலால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த மணிலாலுக்கு சுனிதா என்ற மனைவியும், பிளஸ் 1 படிக்கும் மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர்.

Tags

Next Story