நள்ளிரவில் சாலை விபத்தில் வாலிபர் பலி

நள்ளிரவில் சாலை விபத்தில் வாலிபர் பலி

நள்ளிரவில் சாலை விபத்தில் வாலிபர் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தற்போது சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று சதீஷ், வாழப்பாடியைச் சேர்ந்த விக்கி என்பவரின் இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் வந்தார். இரண்டு சக்கர வாகனத்தை விக்கி ஓட்டி வந்தார். பின்னால் சதீஷ் அமர்ந்து இருந்தார். இவர்கள் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வந்தபோது சாலையோரம் இருந்த கற்களில் இரண்டு சக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் அம்மாபேட்டை போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சதீசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story