கார் மீது லாரி மோதல் – வாலிபர் பலி

கார் மீது லாரி மோதல் – வாலிபர் பலி

விபத்து 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணமேட்டில் நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, அவனியாபுரம் ஏ சி டி நகரை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி 46 வயதான சரஸ்வதி. இந்த தம்பதியின் மகன்கள் 28 வயதான ரகுபதி, 25 வயதான சண்முகம், 22 வயதான ரமேஷ்.இதில் சரஸ்வதி மற்றும் மூன்று மகன்களுடன் காரில் திருச்சி நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

காரை ரகுபதி ஓட்டிச் சென்றுள்ளார்.அப்போது திருச்சி செந்தனீர்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஐயப்பன் மணிகண்டன் எதிரே லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த லாரி எதிர்ப்பாராதவிதமாக மோதி விபத்துக்கானது.இந்த விபத்தில் தாய் மற்றும் மூன்று மகன்கள் காயமடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்களை முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story