வழிகாட்டி பலகையில் பைக் மோதி வாலிபர் பலி !

வழிகாட்டி பலகையில் பைக் மோதி வாலிபர் பலி !

பலி

உளுந்துார்பேட்டை அருகே வழிகாட்டி பலகையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
உளுந்துார்பேட்டை அருகே பைக் விபத்தில் வாலிபர் இறந்தார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கார்த்திக், 23; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் யோகேஸ்வரன், 21; நண்பர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் சேலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை கார்த்திக் ஓட்டினார், எலவனாசூர்கோட்டையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த யோகேஸ்வரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story