விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்ததால் மனைவியை கொல்ல முயன்ற வாலிபர்!

விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்ததால் மனைவியை கொல்ல முயன்ற வாலிபர்!

பைல் படம்

கோவை அருகே விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: கேரள மாநிலம் மூணார் பகுதியை சேர்ந்தவர் வித்யா(30).தற்போது கோவில்பாளையம் பகுதியில் வசித்து வரும் இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிவா என்பவரை காதலித்து திருமணம் கொண்டார்.வித்யா மில் வேலைக்கு சென்று வந்த நிலையில் அவர் நடத்தை மீது சிவா சந்தேகபட்டதின் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கணவரை விட்டு பிரிந்தவர் அருகில் வசிக்கும் தனது சகோதரர் வீட்டிற்கு சென்றவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வித்யாவுடன் அங்கு வந்த சிவா தகராறில் ஈடுபட்ட நிலையில் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோல் கொண்டு வித்யாவின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் உயிருக்கு போராடிய வித்யாவை மீட்டு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் மனைவியை கத்தரிக்கோல் கொண்டு கொலை செய்ய முயன்று தப்பி ஓடிய சிவா மீது வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் சிவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story