கணவனை அடியாட்களை வைத்து தாக்கிய மனைவி !

கணவனை அடியாட்களை வைத்து தாக்கிய மனைவி !

காயம்

காரைக்குடி அருகே கணவனை அடியாட்கள் வைத்து மனைவி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி ரயில்வே கேட் பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இவருக்கும், இவரது மனைவி இந்துமதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இவரது மனைவி, கணவர் தன்னை துன்புறுத்துவதாக பல்வேறு விதமான புகார்களை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அடியாட்களுடன் கணவர் வீட்டிற்கு வந்து அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் காயமடைந்த நிலையில் அருகில் இருந்த மக்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story