இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி
திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள் இருந்து தவறி விழுந்து பெண் பலி
தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் ஊட்டச்சத்து மையம் நடத்தி வந்த குருநாதன் மனைவி முத்துலட்சுமி (35). இவர் திருவேங்கடத்தில் இருந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது மைப்பாறை விளக்கில் எதிர்பாரவிதமாக மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டது. இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story