புளியந்தோப்பில் திருமணம் செய்ய மறுத்த பெண் கழுத்தை அறுத்து கொலை

புளியந்தோப்பில் திருமணம் செய்ய மறுத்த பெண் கழுத்தை அறுத்து கொலை

கொலை செய்யப்பட்ட பெண்

புளியந்தோப்பு பகுதியில் திருமணம் செய்ய மறுத்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா (31). இப்பெண்ணை காணவில்லை என புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தீபாவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், குடியாத்தத்தை சேர்ந்த சேர்மதுரை(26) என்பவரை இன்று கைது செய்தனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக சேர்மதுரை ஒப்புக்கொண்டுள்ளார்.

Tags

Next Story