மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு !

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு !

காவல்துறை

கம்பைநல்லூர் அருகே வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் அருகே ஜே.பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இவர், ஜே.பாளையத்தில் தனது வீட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை செய்து வந்தார். நேற்று வீட்டின் மாடிக்கு தூங்க சென்றார். இன்று அதிகாலையில் அவரது மனைவி கதவை திறந்து பார்த்த போது தலையில் படுகாயத்துடன் சுப்ரமணி கிடந்துள்ளார்.

அப்போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்ரமணி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கம்பபை நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story