மாணவர்களுக்கான ஆதார் பதிவு முகாம் - துவக்கி வைத்த யூனியன் சேர்மன்

செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆதார் பதிவு முகாமை யூனியன் சேர்மன் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்"பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சேவையை" செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் செஞ்சி பேரூராட்சிமன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். உடன் அரசு அதிகாரிகள்,பேரூராட்சி கவுன்சிலர்கள் இருந்தனர்.

Tags

Next Story