விபத்து காப்பீடு விழிப்புணர்வு முகாம்

கிராம மக்களுக்கும் அஞ்சல் துறை மூலமாக விபத்து காப்பீடு. உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு காப்பீடுதொகை 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே திருவாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். திருவாரூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு தலைமையில்,ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அனைத்து கிராம மக்களுக்கும் அஞ்சல் துறை மூலமாக விபத்து காப்பீடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் திருவாரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியன் காடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஊராட்சி மன்றம் சார்பாக அஞ்சல் துறையில் விபத்து காப்பீடு செய்யப்பட்டதால், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு காப்பீடுதொகை 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. காசோலை வழங்கும் விழாவில் காப்பீடு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story