அதிமுக வேட்பாளரை ஆதரித்து புதுகையில் நடிகர் வாக்கு சேகரிப்பு!

அரசியல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து புதுகையில் நடிகர் வாக்கு சேகரித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, காவேரிநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. கருப்பையாவை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான ரவி மரியா வாக்குசேகரித்துப் பேசினார். அப்போது, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் நினைவாக வீட்டில் ஏதாவதொரு இலவசப் பொருள் இருக்கும். மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்கள் மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகின்றன. ஏதாவதொரு பொருள் கொடுத்திருக்கிறார்களா, எதுவும் இல்லை. அதிமுக திட்டங்களை நிறுத்தினார்கள். அனைத்துப் பெண்களுக்கும் ரூ. 1000 வழங்குவதாக தேர்தலுக்கு முன் கூறினார்கள். விண்ணப்பித்த 300 பேரில் 30 பேருக்கு மட்டும் தான் ஆயிரம்ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களை ஏமாற்றிய இந்த ஆட்சி தொடரக் கூடாது. முன்னதாக வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றார் ரவி மரியா. பிரசாரத்தின்போது, வேட்பாளர் ப. கருப்பையா, முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story