பரந்தூர் நில எடுப்பு : துணை கலெக்டர் நியமனம்

பரந்தூர் நில எடுப்பு : துணை கலெக்டர் நியமனம்

கூடுதல் ஆட்சியர் நியமனம் 

காஞ்சிபுரம் மாவட்டம்,பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு கூடுதல் ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றிய, 5,700 ஏக்கர் பரப்பளவில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு, 20 கிராமங்களில் நில எடுப்பு செய்ய, தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, நில எடுப்புக்கு தேவையான அதிகாரிகள் நியமனம் செய்யும் பணிகளை, வருவாய் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள், ஒரு துணை கலெக்டர், 10 தாசில்தார்கள் மற்றும் பிற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நில எடுப்புக்கு புதிய துணை கலெக்டராக, மதுசூதனன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், திருவள்ளூர் மாவட்டம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் துணை கலெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story