பெண்களின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கவுன்சிலர்

பெண்களின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கவுன்சிலர்

டீ மாஸ்டரான கவுன்சிலர் 

மதுரவாயலில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட சென்னை நெற்குன்றம் 145 வது வார்டு நேதாஜி அவென்யூ, மூகாம்பிகை அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடூ வீடாக அதிமுக வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவாக வார்டு கவுன்சிலர் சத்தியநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

அப்போதுஅந்த பகுதியில் உள்ள டீ கடைக்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது நூதனமாக பிரச்சாரம் செய்ய எண்ணிய அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் டீ மாஸ்டராக மாறி டீ குடிக்க வந்த வாக்களர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கியதோடு வீடூ வீடாக சென்ற போது தாய்மார்களின் கால்களில் விழுந்து அதிமுக வேட்பாளர் பிரேம்குமாருக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். மேலும் இரட்டை இலைக்கு தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மளிகை உட்பட பல்வேறு கடைகளுக்கு சென்று வியபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக வின் துணை வட்ட செயலாளர் பாரதி, பொருளாளர் சுரேஷ் ,மோசஸ்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story