மாட்டுவண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்!

மாட்டுவண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்!

அதிமுக 

திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டியில் சென்று வாக்குகள் சேகரித்தாா்.
கருமண்டபம் பகுதியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய அவா் திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட கருமண்டபம், பொன்னகா், மிளகுப்பாறை, திருநகா், ஆா்எம்எஸ் காலனி, பிராட்டியூா், ராம்ஜி நகா், கண்டோன்மென்ட், பறவைகள் சாலை, ஸ்டேட் வங்கிக் காலனி, வில்லயம்ஸ் சாலை, மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளிட்ட 133 இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பல்வேறு இடங்களில் மாட்டு வண்டியை புதுக்கோட்டை மாவட்ட செயலா் சி. விஜயபாஸ்கா் ஓட்டி வர, அதில் இருந்தவாறு வேட்பாளா் கருப்பையா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன், அமைப்புச் செயலா்கள் ரத்தினவேல், வளா்மதி, மாவட்ட துணைச் செயலா் கருமண்டபம் பத்மநாதன், வணக்கம் சோமு , அதிமுக பகுதிக் கழக செயலா்கள், மகளிா் அணியினா், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story