திமுக அரசை கண்டித்து மார்ச்.12ல் அதிமுக மனித சங்கிலி பேராட்டம்

திமுக அரசை கண்டித்து மார்ச்.12ல் அதிமுக மனித சங்கிலி பேராட்டம்

போராட்ட அறிவிப்பு 

லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் வரும் 12ம் தேதி போதை பொருள் கடத்தலால் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி புள்ளம்பாடி பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் வழிகாட்டுதல்படி தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து வருகின்ற 12 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி நகரம், பூவாளூர் பேரூர், புள்ளம்பாடி பேரூர், கல்லக்குடி பேரூர், ஆகியவற்றில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலங்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்களும், கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலியில் இணைந்திடுமாறு அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story