கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் முதல் கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண் (இ.வி. எம்.எஸ்.2.0) மென்பொருள் மூலமாக சுழற்சி முறையில் சட்டப் பேரவை தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல் கட்ட ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த ஒதுக்கீடு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தையல் நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story