அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழப்பு !

அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழப்பு !

பலி

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஜனை கோவில் வீதியில் உள்ள வடிகாலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த போலீசார் சடலத்தை மீட்டு குமாரபாளையம் சவக்கிடங்கில் வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவ்வழியே நடந்து வந்த நபர், நிலைதடுமாறி வடிகாலில் விழுந்து உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது. இது குறித்து குமாரபாளையம் அமானி வி.ஏ.ஓ. ரஞ்சித்குமார் புகாரின்படி, இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story