பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
 பள்ளி ஆண்டு விழா
புளியங்குடி அருகே பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மெர்குரி பார்மா நிர்வாக இயக்குனர் இ.சி.ராஜபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தனகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story