அரசு பள்ளியில் ஆண்டு விழா

ஆலத்தூர் அருகே செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை ஆணைக் கிணங்க பள்ளி ஆண்டு விழா பிப்ரவரி - 10ம் தேதி மதியம் 3 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

முதுகலை உதவி தலைமை ஆசிரியர் பொன்னுதுரை வரவேற்பு ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு முன்னாள் மாணவர்கள் நல சங்க செயலாளர் ராஜா சிதம்பரம் பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா முதுகலை ஆசிரியர் கலியமூர்த்தி தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னாள் மாணவர் வீர ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்கள்,

இதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் 100% பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகள் அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக பட்டதாரி உதவி தலைமை ஆசிரியை தெய்வானை நன்றி கூறினார்.

Tags

Next Story