கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் பெருவளை வாய்க்கால் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு ஆண் நேற்று உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொம்மித் தெருவை சேர்ந்தவர் 55 வயதான செல்லமுத்து.இவரது மனைவி 51 வயதான சுஜாதா இவர்களது மகன் 27 பிரசாத் உறவினர் 55 வயதான சுமதி். பிரசாதின் மனைவி 25 ஹரிணி ஆகிய 5 பேருடன் நேற்று முன்தினம் ராசிபுரத்தில் இருந்து கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை பிரசாத் ஓட்டியுள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சமயபுரத்தில் உள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பெருவளை வாய்க்கால் பாலக்கட்டையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக்கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செல்லமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story