சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

 பாராட்டு விழா

பொன்னமராவதி அருகே சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூரில் தமிழ்ச்செம்மல் விருதாளர் மற்றும் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. திருக்களம்பூர் முத்தமிழ் மன்றம், வள்ளல் பாரி மன்றம், ஊராட்சி மன்றம் மற்றும் கிராம நிர்வாகக் குழு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு திருக்களம்பூர் ஊராட்சி துணைத் தலைவ ம. மணி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்வே. பழனிச்சாமி, முத்தமிழ் மன்றத் தலைவர் சி. தர்மலிங்கம், கிராம நிர்வாகக் குழு கௌரவத் தலைவர் வை. சுப்பிரமணியன், வள்ளல் பாரி நற்பணி மன்றத் தலைவர் ஆ. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அண்மையில் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற திருக்களம்பூர் நெ. இராமச்சந்திரன், சர்வதேச மூத்தோர் தடகளப்போட்டியில் வெள்ளி வென்ற செல்லியம்பட்டி வீர. கோவிந்தன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற திருக்களம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ப. நாகராஜன், கல்வியாளர் வ.சி. பழ.சிதம்பரம், வழக்குரைஞர் அ. கணேசன், பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறை அறக்கட்டளைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு, முத்தமிழ்ப் பாசறைத் தலைவர் பெ. மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

Tags

Read MoreRead Less
Next Story