ஆலங்குளம் பேருந்து பயணியிடம் திருடியவா் கைது

ஆலங்குளம் பேருந்து பயணியிடம் திருடியவா் கைது
ஆலங்குளம் பேருந்து பயணியிடம் திருடியவா் கைது
ஆலங்குளம் பேருந்து பயணியிடம் திருடியவா் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நத்தம் ராமா் மனைவி செல்வக்கனி(40). இவா் தென்காசி செல்வதற்காக ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்து ஒன்றில் ஏறினாராம்.

அப்போது, அவரைப் பின் தொடா்ந்து வந்த நபா் ஒருவா், செல்வக்கனி வைத்திருந்த கைப்பையில் இருந்து பா்ஸ்சை திருடி தப்பிச் செல்ல முயன்றாா். சகபயணி ஒருவா் இதைக் கவனித்து கூச்சலிட்ட போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குளம் போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் அந்த நபா் திருநெல்வேலி புதுப்பேட்டே கருப்பையா மகன் ஐயப்பன்(50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

Tags

Next Story